பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர், தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துள்ளார் நித்தியானந்தா. இந்து சாமியார் என்கிற போர்வையில் இந்து மதத்தை அவமதிக்கிறார். இந்த நித்தியானந்தா பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. சாமியார் என்கிற போர்வையில் பல கோடிகளை சுருட்டி உள்ளார் நித்தியானந்தா. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் அவரை கிரிமினல் வழக்கில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சாமியார் நித்தியானந்தா வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சாமியார் நித்தியானந்தத்துக்கு முன் ஜாமீன் கேட்டும், தொலைக்காட்சியில் வெளிவரும் வீடியோ தடை செய்ய வேண்டும் என்றும் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மணிவாசகம், இந்த மனு மீதான விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தவுடன், வீடியோ காட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்
நித்தியானந்த சாமியார் நடிகையுடன் இருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க சென்னை சிட்டி சிவில் கோர்ட் மறுத்து விட்டது.

0 comments:
Post a Comment