மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு புதன்கிழமை அளித்துள்ள பேட்டியில் முரளிதரன் இது குறித்து மேலும் கூறியுள்ளது:

÷நான் இன்னும் ஓரிரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறேன். அக்டோபர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் போட்டிதான் எனது கடைசி சர்வதேச ஆட்டமாக இருக்கும். 2011-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவேன். ஓய்வு பெறும் முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று எண்ணியுள்ளேன் என்றார் அவர். தற்போது 37 வயதாகும் முரளிதரன், 132 டெஸ்ட் ஆட்டங்களில் 792 விக்கெட்டுகளையும், 334 ஒருநாள் ஆட்டங்களில் 512 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்

0 comments:

Post a Comment

About this blog

My Blog List

Pages

Followers

Blog Archive

Blog Archive